ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றிய கழக செயலாளர் தனசேகரன் மற்றும் பேரூர் கழக செயலாளர் சரண்பிரபு ஆகியோர் ஏற்பாட்டில் மாற்று கட்சிகளான திமுகவை சேர்ந்த குன்னத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் திவியா விஜய், இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் ஹரி, கொங்கு இளைஞர் அணி துணை செயலாளர் கோபால்சாமி, நாம் தமிழர் கட்சியின் இடையர்பாளையம் மனோஜ், கௌதமன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற
இந்த நிகழ்வின்போது புதியதாக கழகத்தில் இணைந்தவர்களை பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி. கருப்பண்ணன், பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கண்ணம்மாள் ராமசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.