திருவடனை - Tiruvadanai

பழுதடைந்த நூலகம்: மன வருத்தத்தில் வாசகர்கள்.!

ராமநாதபுரம் மாவட்டம், ஆர். எஸ். மங்கலம் தாலுகா, ஆனந்தூரில் கிளை நூலகம் நீண்ட காலமாக இயங்கி வருகிறது. நூலகம் கட்டிடங்கள் பழுதடைந்து இருப்பதால் வாசகர்கள் படிக்கும் பொழுது மேலிருந்து கற்கள் கீழே விழுவதாக சொல்லப்படுகிறது. இதனால் நூலகத்துக்கு வரும் வாசகர்கள் குறைந்து காணப்படுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் மழைநீர் ஒழுவதாகவும் வெயில் காலங்களில் விரிசல் அடைவதாகவும் வாசவர்கள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தனர். இதனால் நூலகத்தை பராமரிக்கக் கூடியவர் காலையில் நூலகத்தை திறந்து வைத்து விட்டு சென்று விட்டு, மாலை நேரங்களில் வந்து அடைத்து செல்வதாகவும் தெரிவிப்பதோடு காலை மாலைக்கு இடைப்பட்ட நேரங்களில் நூலகத்தை பராமரிப்பவர் வருவது கூட அச்சம் ஏற்படும் நிலைதான் இக்கட்டிடம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் மெத்தன போக்கையை கையாண்டு வருவதாக வாசிப்பாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். புத்தகம் வாசிப்பதினால் மன அமைதி கிடைக்கும் என்று நூலகம் வந்தால் இங்கும் மன உளைச்சல் ஏற்படுவதாக தெரிவிப்பதோடு, மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி நூலக கட்டிடத்தை முறையாக பராமரித்து அதனை சரி செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


இராமநாதபுரம்