கீரி - பாம்பு இடையே இருக்கும் இயற்கையான பகை நாம் அறிந்தது தான். பாம்புக்கும் கீரிக்கும் இடையிலான சண்டைக்கு அடிப்படை காரணம், உயிர் பிழைத்தலுக்கான நிர்பந்தமே என்கிறார்கள் விலங்கு நல ஆராய்ச்சியாளர்கள். இந்த இரண்டு உயிரினங்களுமே நிலவாழ் உயிரினங்களாகவும் இருப்பதால் அடிக்கடி வாழ்விட மோதல்கள் நிகழ்கின்றன. ஆகவே, அவை ஒன்றையொன்று தங்கள் இருப்புக்கு அச்சுறுத்தலாக கருதுகின்றன என கூறப்படுகிறது.