இராமநாதபுரம் : தமமுக சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மங்களக்குடி ஊராட்சி மன்றம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. தொண்டி அருகே உள்ள மங்கலக்குடியில் நடைபெற்ற இந்த முகாமில், ஜமால் மைதீன் ஒன்றிய கவுன்சிலர் அப்துல் ஹக்கீம் முன்னிலை வகித்தனர். டாக்டர் பூஜா, ஒருங்கினைப்பாளர் முருகேசன் ,ஊராட்சி மன்ற தலைவர், தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா, மாவட்ட தலைவர் பட்டாணி மீரான், வழக்கறிஞர் ஜிப்ரி மாவட்ட செயலாளர், ம ம க. ஜாவித் அஸ்லாம் மாவட்டச் செயலாளர் . யாண்பு இப்ராஹிம் மாவட்டத் துணைத் தலைவர் தாஹா ரசூல் மருத்துவ அணி ஜித்தா மண்டலம் , ஜாகிர் உசேன் கிளைத்தலைவர் , சேக் கலிபா கிளை செயலாளர் , சகுபர் சாதிக் கிளை பொருளாளர் தமுமுக மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் . இந்த இலவச கண்சிகிச்சை முகாமில் கலந்துகொண்ட 250கும் மேற்பட்டோரில், 20 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட் டனர் .