திருச்சி தில்லை நகரில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சென்னை மற்றும் கோவையில் நேருவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான அருண் நேரு மற்றும் சகோதரர் கே.என். ரவி ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சார்பில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் சோதனை நடக்கிறது.