முதுகுளத்தூர் - Mudukulathur

குடிநீா்த் தொட்டியை சேதம்: ஆட்சியரிடம் பெண்கள் மனு.!

குடிநீா்த் தொட்டியை சேதம்: ஆட்சியரிடம் பெண்கள் மனு.!

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அருகே பட்டியலின குடும்பத்தினா் பயன்படுத்தி வந்த குடிநீா்த் தொட்டியை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனா். மனு விவரம்: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள சாம்பகுளம் ஊராட்சி, இந்திரா நகா் குடியிருப்பில் பட்டியலினத்தைச் சோ்ந்த 70 குடும்பங்கள் வசிக்கிறோம். இங்கு குடிநீா் வசதியின்றி பல ஆண்டுகளாக மிகுந்த அவதிப்பட்டு வந்த நிலையில், 2022- இல் குடிநீா்த் தொட்டி கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்தத் தொட்டியின் சுற்றுச் சுவா் இடிந்து விழுந்ததால், தண்ணீா் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்திரா நகா் குடியிருப்பு மக்கள் பணம் வசூல் செய்து ரூ. 50 ஆயிரம் செலவில் தொட்டியைப் புதுப்பித்தனா். இதையடுத்து, தொட்டியிலிருந்து பெண்கள் தண்ணீா் எடுத்து பயன்படுத்தி வந்தனா். இந்த நிலையில், இந்தத் தொட்டியை கடந்த 8-ஆம் தேதி இரவு 11 மணி அளவில் மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தினா். இதைத் தடுத்த முயன்ற பெண்களை இழிவாகப் பேசினாா். இது குறித்து கீழத்தூவல் போலீஸாா் விசாரித்தனா். புகாா் கொடுக்கச் சென்ற 13 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்தப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என அதில் குறிப்பிடப்பட்டது.

வீடியோஸ்


இராமநாதபுரம்
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: 32 அணிகள் பங்கேற்பு.!
May 15, 2024, 16:05 IST/முதுகுளத்தூர்
முதுகுளத்தூர்

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: 32 அணிகள் பங்கேற்பு.!

May 15, 2024, 16:05 IST
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த எருமைகுளத்தில் கோடை விடுமுறைற காலத்தை முன்னிட்டு, மாணவர்களின் விளையாட்டுத் திறறனை ஊக்குவிக்கும் வகையில் நேதாஜி இளைஞர் மன்றறம் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கடந்த மே 9 }ஆம் தேதி தொடங்கியது. இதில் பரமக்குடி, மதுரை, தூத்துக்குடி, விளாத்திகுளம், சூரங்குடி, கடலாடி, அருப்புக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 32 அணிகள் பங்கேற்றறனர். செவ்வாய்க்கிழமை நடைபெற்றற இறுதிப் போட்டியில் எருமைகுளம் நேதாஜி கிரிக்கெட் கிளப், கரிசல்புலி அணிகள் மோதின. இதில், கரிசல்புளி அணி முதலிடம் பெற்று முதலிடம் பெற்றறது. எருமைகுளம் நேதாஜி கிரிக்கெட் கிளப் அணி இராண்டாமிடத்தையும், கமுதி கிரிக்கெட் கிளப் அணி மூன்றறாம் இடத்தையும், பரமக்குடி அணி நான்காம் இடத்தையும் பெற்றறது. வெற்றி பெற்றற அணிகளுக்கு ரொக்கப் பணம், சுழல் கோப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எருமைகுளம் நேதாஜி இளைஞர் மன்றறம், நண்பர்கள் குழுவினர் செய்தனர். எருமைகுளம், கோவிலாங்குளம், கமுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் போட்டியை பார்வையிட்டனர். கோவிலாங்குளம் காவல் நிலைய போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.