ராமநாதபுரம்: துப்புரவு தொழிலாளர்களுக்கு ரெயின் கோட் இலவசமாக வழங்கினார்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு மழைக்காலம் தொடங்கிய நிலையில் அவர்களுக்கு மழையில் நனையாதவாறு பணியினை தொடர ரெயின் கோட் இலவசமாக வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு ஊராட்சி தலைவர் இலக்கியா ராமு தலைமையில் சில்ட்ரன்ஸ் சாரிடபுள் டிரஸ்ட் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் முன்னிலையில் நடந்தது. இதில் திருவாடானை, கல்லூர் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட 35 துப்புரவு பணியாளருக்கு ரெயின் கோட் வழங்கப்பட்டுள்ளது.