முதுகுளத்தூர் - Mudukulathur

நெல் விதைப்பு பணி தீவிரம்: விதை நெல் விலை உயர்வால் கவலை.!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் நெல் விதைப்பு பணிகள் துவங்கிய நிலையில் விதை நெல் விலை உயர்வால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருவாடானை தாலுகாவில் மழையை பயன்படுத்தி விளை நிலங்களை விதைப்பு செய்வதற்கு ஏற்ற வகையில் உழவு செய்து தயார் நிலையில் வைத்திருந்த விவசாயிகள் தற்போது நேரடி நெல் விதைப்பு பணியை துவக்கியுள்ளனர். கிளியூர், அஞ்சுகோட்டை, வாணியேந்தல், ஆலம்பாடி, குஞ்சங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேரடி நெல் விதைப்பை தீவிரபடுத்தியுள்ளனர்.

வீடியோஸ்


இராமநாதபுரம்