ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேருந்து நிலையத்தில் இன்று (மார்ச். 18) காலை அங்குள்ள கடையில் வடை வாங்கிவிட்டு பேருந்திற்காக திரும்பும் போது அரசு பேருந்து மோதியதில் கடுகுசந்தை சத்திரம் கிராமத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி மீது பேருந்து மோதியது. இதில் இரண்டு கால்கள் உடைந்து பலத்த காயமடைந்த நிலையில் விபத்து குறித்து சாயல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்