சிறப்பு அலங்காரத்தில் விஜயகிரி வடபழனி ஆண்டவர்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் ஆலயத்தில் கிருத்திகை தினத்தை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்தம், தேன், பால் தயிர், மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் காலை முதல் முருகப்பெருமானை தரிசனம் பெற்றனர்.