பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றிருந்த துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு ரஷிய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா மற்றும் டென்மார்க்கை சேர்ந்த கிளாரா டவுசன் முன்னேறினர். தொடர்ந்து, இறுதிப்போட்டி நேற்று (பிப்.,22) நடைபெற்றது. இதில் ஆண்ட்ரீவா 7-6 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.