எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் மற்றும் ஐந்து படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மன்னார் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் போது எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டு தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.