பூம்புகார் - Poombhukar

திருஇந்தளூா் கோயிலில் பங்குனி உற்சவ கொடியேற்றம்

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்ச அரங்க தலங்களில் ஒன்றானதும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது தலமுமான இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயிலில், பங்குனி உத்திரப் பெருந்திருவிழா தொடங்கி ஏப்ரல் 12-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. விழாவையொட்டி, கோயில் வசந்த மண்டபத்தில் உற்சவமூர்த்திகள் எழுந்தருளிச் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, கோயில் கொடிமரத்துக்கு பட்டாச்சாரியர்கள் பூஜைகள் செய்து, கருடக்கொடி ஏற்றினர். பின்னர், மகாதீப ஆராதனை காட்டப்பட்டது.  இதில் கோயில் செயல் அலுவலர் ரம்யா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பத்து நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் தினமும் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. சிகர விழாவாக 9-ஆம் திருநாளான ஏப்ரல் 11-ஆம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு கோயில் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. தெப்ப உற்சவம் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.

வீடியோஸ்


நாகப்பட்டினம்