திருமங்கலம் - Thirumangalam

மருந்து கடையில் பெண்ணிடம் நகை பறிப்பு

மருந்து கடையில் பெண்ணிடம் நகை பறிப்பு

மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் மருந்துக்கடையில் இருந்த பெண்ணிடம் தங்கச் செயினை பறித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி சத்திரத்தை சேர்ந்த பனையப்பன் மனைவி தெய்வானை (29). பனையப்பன் மதுரை ரோட்டில் மெடிக்கல் ஸ்டோர் வைத்துள்ளார். தெய்வானை அவருக்கு உதவியாக கடையில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் (செப்.,19) இரவு பனையப்பன் வெளியில் சென்றிருந்த நேரத்தில் தெய்வானை மட்டும் கடையில் இருந்தார். அப்போது அங்கு ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களில் ஒருவர் மெடிக்கலுக்கு வந்து தலைவலி மாத்திரை கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். உடனே தெய்வானை மாத்திரையை எடுத்து கொடுத்தபோது அவர் அணிந்திருந்த 3 பவுன் தாலிச் செயினை பறிக்க முயன்றார். தெய்வானை தாலியை இறுகப் பிடித்துக் கொண்டு அலறினார். செயினில் ஒரு பாதி தப்பிய அந்த நபரின் கையோடு எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా