திருமங்கலம் - Thirumangalam

தனியார் பேருந்து மோதியதில் இளைஞர் பலி

தனியார் பேருந்து மோதியதில் இளைஞர் பலி

மதுரை: திருமங்கலத்தில் நேற்று (செப்.,21) இரவு பேருந்து மோதியதில் இளைஞர் பலியானார். மதுரை மாவட்டம் திருமங்கலம் மம்சாபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் (18) என்பவர் இருசக்கர வாகனம் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று (செப்.,21) இரவு நண்பர் சச்சினுடன் பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றார். சென்றனர். அப்போது உசிலம்பட்டி ரோடு தாளை முத்தையா கோயில் அருகே திருமங்கலத்தில் இருந்து தேனிக்கு சென்ற தனியார் பேருந்து மோதியதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந்த சச்சின் மருந்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా