மதுரை திருமங்கலம் அருகே உள்ள செங்கம் கடை கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (36) என்பவர் மரம் அறுக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் (பிப்.22) இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் அவரது மனைவி சுதா நேற்று (பிப்.23) திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன நபரை தேடி வருகின்றனர்.