9 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

69பார்த்தது
9 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
9 மாவட்டங்களில் இன்று (பிப்., 26) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தொடர்புடைய செய்தி