ஓசூர் - Hosur

டூவீலர் மீது லாரி மோதி மளிகை கடைக்காரர் உயிரிழப்பு.

டூவீலர் மீது லாரி மோதி மளிகை கடைக்காரர் உயிரிழப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள சின்னார் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (46) இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று(செப்-21 ) கடைக்கு பொருட்களை வாங்குவதற்காக தனது டூவீலரில் ஓசூருக்கு சென்ற போது பேரண்டபள்ளி அருகே அவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி ராமமூர்த்தி மீது மோதியது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஓசூர் அட்கோ போலீசார் ராமமூர்த்தியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

வீடியோஸ்