மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இன்று (பிப்., 21) மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது. தொடக்க விழாவை ஒட்டி கட்சிக்கொடியை ஏற்றி வைத்து அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். தொடக்க விழாவையொட்டி தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.