விளவங்கோடு - Vilavengodu

யானை மிதித்து தொழிலாளி சாவு - பாஜக நிர்வாகி ஆறுதல்

யானை மிதித்து தொழிலாளி சாவு - பாஜக நிர்வாகி ஆறுதல்

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மயிலாறு பகுதியில் காட்டு யானை தாக்கி பலியான அரசு ரப்பர் தோட்ட தொழிலாளி மணிகண்டன்( 55 ). இறந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நந்தினி அங்கு சென்று மணிகண்டனின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இது வரை பத்து லட்சம் வழங்க பட்டு வந்த நிலையில் , கள்ள சாரய மரணங்களுக்கு பத்து லட்சம் வழங்கிய அரசு வேலை சென்ற இடத்தில் உயிரிழந்த இந்த ரப்பர் தோட்ட தொழிலாளி குடும்பத்திற்கு 25-லட்சம் வழங்க வேண்டுமெனவும் , குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அரசு ரப்பர்கழகம் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தார். வனத்துறை பத்து லட்சம் அரசு பத்து லட்சம் காப்பீடு ஐந்து லட்சம் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా