உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் பைக்கில் குழந்தையுடன் சென்ற தம்பதி மீது லாரி மோதிய விபத்தில் மனைவி உயிரிழந்தார். மாயா பிரகாஷ் மௌரியா என்பவர் தனது மனைவி கமலா தேவி மற்றும் 5 வயது மகனுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி அவர்கள் மீது மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.