மொடக்குறிச்சி - Modakurichi

ஈரோடு வில்லாசம்பட்டி கல்குவாரியில் தீ

ஈரோடு வில்லாசம்பட்டி கல்குவாரியில் தீ

ஈரோடு அருகே வில்லரசம் பட்டி, தொட்டம்பட்டியில் நாச் சிமுத்துவுக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பிலான கல் குவாரி உள்ளது. இங்குள்ள பாறை குழியில் அப்பகுதியில் உள்ள சில ஆலைகள், தோல் உள் ளிட்ட பல்வேறு திடக்கழிவு களை கொட்டி வருகின்றனர். இத்துடன் எண்ணெய் கழிவுக ளையும் கொட்டியுள்ளனர். இதில் நேற்று முன் தினம் மாலை, 5: 45 மணியளவில் தீப்பிடித்து எரிய துவங்கியது. இதனால் கிளம்பிய புகை மூட்டம் சாலையை மறைத்தது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். தகவலறிந்த ஈரோடு தீய ணைப்பு நிலைய வீரர்கள், 6: 10 மணிக்கு சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். ஏழு தனியார் லாரிகளில் தண்ணீர் வரவழைக் கப்பட்டு நள்ளிரவில் தீயை கட் டுப்படுத்தினர். ஆனாலும், தொடர்ந்து கரும் புகை வெளியேறியபடி இருந் தது. மீண்டும் தீப்பிடிக்க வாய்ப் பிருந்ததால் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கேயே காத்திருக்க அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் நேற்று மதியம், 12: 00 மணியளவில் தீ முழு மையாக கட்டுப்படுத்தப்பட் டது. இதன் பிறகே தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு நிலையம் திரும்பினர்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా