நத்தம் - Natham

இரும்பு கேட்டில் சிக்கிகொண்ட நாயை மீட்ட தீயணைப்பு துறையினர்

திண்டுக்கல், ரவுண்ட் ரோடு, ராம்நகர், முல்லை தெரு பகுதியில் நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்த வீட்டின் வாயில் கேட்டில் நாய் ஒன்று மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடி நீண்ட நேரமாக கத்திக் கொண்டிருந்தது. சனிக்கிழமை மதியம் 12. 30 மணி அளவில் இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் திண்டுக்கல் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி நவீன உபகரணங்களுடன் நாயை உயிருடன் மீட்டனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా