மினி வேன் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி

60பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குடகிப்பட்டி ஊராட்சி மேற்குப்பட்டியை சேர்ந்தவர் ராசுப்பிச்சை வயது 60 கூலித்தொழிலாளி. மற்றும் அதே ஊரை சேர்ந்த அழகுராஜா வயது 27. இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் செந்துறை சென்று அங்கு கோழிக்கறி வாங்கிவிட்டு மீண்டும் ஊருக்கு வரும் வழியில் செந்துறை சார் பதிவாளர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது

எதிரே வந்த மினி வேனும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் பலமாக மோதிக்கொண்டது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த ராசுபிச்சை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த அழகுராஜா என்பவர் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மினி வேனை ஓட்டி வந்த செந்துறையைச் சேர்ந்த ஏசுவா வயது 25 என்பவரை நத்தம் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி