விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக அக்டோபர் 2-ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற இருக்கும் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாகச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மகளிர் அணி மற்றும் மாநில மண்டல, மாவட்ட, நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கண்ணதாசன் மாநாடு மேலிட பொறுப்பாளர் கலைவாணன், மகளிர் மாநாட்டிற்கு ஆயிரம் பெண்களை திரட்டி அழைத்துச் செல்ல வேண்டும். திண்டுக்கல் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக ரூ. 10 லட்சத்தை நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவனிடம் வழங்கப்படவுள்ளது. அது மட்டுமல்லாமல் மாநாட்டிற்கு திண்டுக்கல்லில் இருந்து 100 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் அன்பரசு, மகளிர் அணி மாவட்ட செயலாளர் சவாரி அம்மாள், மாநிலத் துணைச் செயலாளர் திருச்சித்தன், நகரச் செயலாளர் ஆனந்தராஜ், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை இருதயராஜ், வழக்கறிஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் மருதுபாண்டி, நகரப் பொருளாளர் பால்ராஜ், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஸ்வீட் ராஜா மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.