விடுதலை சிறுத்தை கட்சி செயற்குழு கூட்டம்

76பார்த்தது
விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற இருக்கும் மாநாட்டில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மகளிர் அணி மற்றும் மாநில மண்டல மாவட்ட நகர அனைவரும் கலந்து கொண்டன சிறப்பு அழைப்பாளராக கண்ணதாசன் கலைவாணன் மகளிர் மாநாடு குறித்து ஆயிரம் மகளிர்களை திரட்டி மாநாட்டிற்கு செல்ல வேண்டும் மற்றும் திண்டுக்கல் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக ரூ 10 லட்சம் நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவனிடம் வழங்க உள்ளோம் அது மட்டுமல்லாமல் மாநாட்டிற்கு திண்டுக்கல்லில் இருந்து 100 வாகனங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் அன்பரசு, மகளிர் அணி மாவட்ட செயலாளர் சவாரி அம்மாள், மாநிலத் துணைச் செயலாளர் திருச்சித்தன், நகரச் செயலாளர் ஆனந்தராஜ், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை இருதயராஜ், வழக்கறிஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் மருதுபாண்டி, நகரப் பொருளாளர் பால்ராஜ், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஸ்வீட் ராஜா மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி