தொண்டாமுத்தூர் - Thondamuthur

கிணற்றில் குதித்த இளைஞரின் உடல் 4 நாட்களுக்குப் பிறகு மீட்பு

கிணற்றில் குதித்த இளைஞரின் உடல் 4 நாட்களுக்குப் பிறகு மீட்பு

கோவை சங்கனூர் நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் என்ற இளைஞர், திருமணம் ஆகாத விரக்தியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மன உளைச்சலுடன் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 11 அன்று மாலை, விஜயராகவன் தனது வீட்டு அருகே உள்ள கிணற்றில் குதித்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த நான்கு நாட்களாக தீயணைப்புத் துறையினர் தீவிரமாக உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. இதனால், தூத்துக்குடியில் உள்ள கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடல் முத்து எடுக்கும் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 15 அன்று கோவை வந்தடைந்த கூபா டைவிங் குழுவினர், பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடலை மீட்டு கிணற்றிற்கு மேலே கொண்டு வந்தனர். பின்னர், உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் நான்கு நாட்களாக அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞர்களிடையே மது அருந்தும் பழக்கம் மற்றும் மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా