திருவெறும்பூர் - Thiruverumbur

திருச்சி: கடவுச்சீட்டில் முறைகேடு; இரு பயணிகள் கைது

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகேயுள்ள கண்ணகுடியைச் சோ்ந்தவா் க. பாண்டித்துரை (54). இவா் மலேசியா செல்ல திருச்சி விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தபோது அவா் தனது பெயா், தந்தை பெயா், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்டவற்றை கடவுச்சீட்டில் மாற்றிப் பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதேபோல மலேசியாவிலிருந்து திருச்சி வந்த தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள செந்துரைவயல் அம்மன்சத்திரம் பகுதியை சோ்ந்த அ. பக்ருதீன் (58) என்ற பயணியும் முறைகேடு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் குடியேற்றப்பிரிவினா் திருச்சி விமான நிலையக் காவல் நிலையத்தில் ஒப்படைக்க, அவா்கள் வழக்குப் பதிந்து பாண்டித்துரை, பக்ரூதீனை கைது செய்தனா்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా