இரும்பு பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து

81பார்த்தது
இரும்பு பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து
சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் குடோனில் நேற்றிரவு (அக்.17) பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும் முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், நான்கு ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டன. இதற்கிடையே எட்டு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி