இடியுடன் கூடிய மழை பெய்யும்: வெதர்மேன் தகவல்

73பார்த்தது
இடியுடன் கூடிய மழை பெய்யும்: வெதர்மேன் தகவல்
வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மழை பெய்துள்ளது. இன்று (அக்., 18) இரவு முதல் நாளை (அக்., 19) காலை வரை மீண்டும் வட உள் தமிழகம் உட்பட பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி