விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல்

81பார்த்தது
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று சார்ஜாவில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ஒரு பயணியின் உடமைகளில் சோதனை செய்ததில் உரிய அனுமதியின்றி கொண்டு வந்த ரூ. 1, 55, 380 மதிப்புள்ள 9140 சிகரெட்டுகளை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் 47, 000/- மதிப்புள்ள பாகிஸ்தானை சேர்ந்த அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களையும் அதிகாரிகள் மீட்டனர்.

அதேபோல் ஏர்ஏசியா விமானம் மூலம் பேங்காக்கில் இருந்து வந்த ஒரு பயணியிடம் ₹. 4, 43, 020 மதிப்புள்ள 26060 சிகரெட்டை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி