சமயபுரம் அருகே முன்னாள் அரசு பள்ளி மாணவர்களின் சந்திப்பு

57பார்த்தது
சமயபுரம் அருகே முன்னாள் அரசு பள்ளி மாணவர்களின் சந்திப்பு
சமயபுரம் அருகே கொணலை புனித தெரசாள் உயர்நிலைப் பள்ளியில் 2014 ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவ- மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரம் அருகேயுள்ள கொணலை கிராமத்தில் உள்ள புனித தெரசாள் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2014-2017 ம் ஆண்டு 10-ம் வகுப்பில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். அதன் பின்னர் மேற்படிப்பிற்காக சிலர் மற்ற பள்ளிகளுக்கும், மற்றவர்கள் வெளி மாவட்டங்களுக்கும் சென்று விட்டனர். தற்போது அப்பள்ளியில் படித்தவர்கள் பலரும் அரசு பணிகளில் வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் மற்றும் வெளிநாட்டிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதையடுத்து தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த பள்ளியின் தாளாளர் மரியதாஸ் , தலைமை ஆசிரியர் ராணி , ஆசிரியர் சார்லஸ் , மற்றும் மற்ற ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து ஆசி பெற்றனர்.