மதுக்கடைகளை மூட முழு அதிகாரம் அரசிடம் உள்ளது - ஜிகே வாசன்

54பார்த்தது
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று (அக் 3) நடைபெற்றது.

கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களை ஜி.கே.வாசன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவதற்கான முழு அதிகாரம் அரசிடம் தான் உள்ளது. மது கொள்கை மூலம் மக்களை ஏமாற்றுபவர்களை வாக்கு சீட்டு மூலம் மக்கள் ஏமாற்றுவார்கள்.

மீனவர்கள் பிரச்சனை தொடர் பிரச்சனையாக உள்ளது. 160- க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். நாளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு செல்கிறார். அவர் புதிய அதிபரிடம் இந்த விவகாரம் குறித்து பேசி மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

அமைச்சரவையில் மாற்றம் இருந்தாலும் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளில் மாற்றம் இருக்காது என மக்கள் எண்ணும் அளவிற்கு தான் இந்த ஆட்சியின் நிலை உள்ளது. உடல்நிலை சரியில்லாத ரஜினி நலமுடன் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். தமிழகத்தில் புதிய கட்சி பலர் தொடங்கி இருக்கிறார்கள். கட்சியின் தொடக்கம் ஆரவாரமாக தான் இருக்கும். அது தான் த. வெ. க. வில் நடக்கிறது. இதைத் தாண்டி வேறு எதுவும் இதில் கருத்து கூற விரும்பவில்லை என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி