மணச்சநல்லூர் - Manachanallur

புனிததோமையார் ஆலய தேர் பவனி - திரளான பக்தர்கள் பங்கேற்பு

லால்குடி அருகே புனித தோமையார் ஆலய தேரோட்டம் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் கிராமத்தில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 81 வது ஆண்டு திருவிழா கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியினை வட்டார முதன்மை குரு சூசைமாணிக்கம் ஏற்றி மறையுறை ஆற்றினார். அதனை தொடர்ந்து தினமும் பல்வேறு பங்கு தந்தையர்களால் கூட்டுப் பாடல் திருப்பலி நடத்தப்பட்டு மக்களுக்கு மறையுறை ஆற்றினார்கள். நேற்று மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரபவனியும், விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது. தேர்பவனியை பங்குத்தந்தை தன்ராஜ் மற்றும் ஆலம்பாக்கம் கிராமத்தில் இருந்து பிறந்து வெளியூர் கிறிஸ்தவ ஆலயங்களில் பங்குத்தந்தைகளாக இருக்கும் பாதிரியார்கள் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து புனித தோமையாரை மனதுருகி பிரார்த்தனை செய்தனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా