வரகுப்பை கிராமத்தில் மீன்பிடி திருவிழா

54பார்த்தது
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வரகுப்பை கிராமத்தில் ஊரேரி உள்ளது. இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படும். இந்தாண்டு வெயிலானது 110 டிகிரி வரை வாட்டி வதைத்து வருவதால் ஏரியில் தண்ணீர் இன்றி வற்றியது.
இதனால் ஏரியில் குட்டை போல தேங்கிய நீரில் ஏராளமான மீன்கள் இருந்தன.
இதனையறிந்த கிராம பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஊரேரியில் இறங்கி மீன் பிடித்து வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி