பட்டாசு ஆலை விபத்து - பலியானோர் எண்ணிக்கை உயர்வு

21119பார்த்தது
பட்டாசு ஆலை விபத்து - பலியானோர் எண்ணிக்கை உயர்வு
சிவகாசி கீழத்திருத்தங்கலில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது இடிபாடுகளில் சிக்கி இருந்த மற்றொரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும், இதில் படுகாயமடைந்த 12 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தொடர்ந்து, மீட்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி