வண்டல் மண் கடத்திய 1ஜே. சி. பி, 2டிராக்டர்கள் பறிமுதல்

66பார்த்தது
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதுவத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் வண்டல் மண் திருட்டு நடப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அவரின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது 1 ஜே. சி. பி. எந்திரம் மூலம் 2 டிராக்டர்களில் வண்டல் மண் அள்ளி கடத்தியது தெரியவந்தது. உடனடியாக போலீசார் 1 ஜே. சி. பி. மற்றும் 2 டிராக்டர்களையும் அதில் அள்ளப்பட்ட வண்டல் மண்ணையும் பறிமுதல் செய்தனர். வண்டல் மண் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை பிடித்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் முதுவத்தூர் பகுதியை சேர்ந்த செல்லப்பிள்ளை மகன் செல்வகுமார் என்பவரின் வயலில் தென்னம்பிள்ளை மரம் வளர்ப்பதற்கு பெரிய ஏரியில் இருந்து அனுமதி இன்றி திருட்டுத்தனமாக வண்டல் மண் எடுத்தது தெரியவந்தது. இதை அடுத்து செல்வகுமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் ராஜ், சுரேஷ், பச்சமுத்து மகன் செல்வகுமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலீசார் கல்லக்குடி காவல் நிலையத்தில் நான்கு பேரையும் மற்றும் பறிமுதல் செய்த 1 ஜேசிபி 2 டிராக்டரை ஒப்படைத்தனர். இதை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த கல்லக்குடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி