கொள்ளிடத்தில் குளிக்கச் சென்ற தந்தை மகன் நீரில் மூழ்கி பலி

70பார்த்தது
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்டாங்கோரை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரத்தினம் மகன்கள் தங்கவேல் ( வயது 32 ) மோகன் ( வயது 29 ) ஆகியோர் உடன் பிறந்த சகோதரர்கள் ஆவர்.
இதில் அண்ணன் தங்கவேலுக்கு திருமணம் ஆகி எட்டு வயதில் ரிதன் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் மோகன் மற்றும் அவரது அண்ணன் மகன் ரிதனை அழைத்துக் கொண்டு கிராமத்திற்கு அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கினர். இதனை அறிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொள்ளிடத்தில் மூழ்கியவர்களை சடலமாக மீட்டனர்.
தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியானது இப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி