காளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து நகை பணம் கொள்ளை

75பார்த்தது
திருச்சி மாவட்டம் லால்குடி நன்னிமங்கலம் கிராமத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் காளியம்மன் காளி சிலையானது 40 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
இந்த கோயிலில் நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் தினமும் கோயிலில் பூஜை செய்து விட்டு செல்வது வழக்கம். வழக்கம் போல பூசைகள் முடித்து விட்டு சென்றுள்ளார்.
இன்று காலை கோயில் திறக்க வந்த போது கோயில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த முக்கால் பவுன் தாலி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக கோயில் பூசாரி தட்சிணாமூர்த்தி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி