சமயபுரத்தில் பக்தரின் ஒன்றரை பவுன் நகை திருட்டு

2925பார்த்தது
சமயபுரம் கோயிலில் முடி காணிக்கை செலுத்தி விட்டு குளிக்க சென்ற பக்தரிடம் 1 1/2 பவுன் நகை ரூபாய் 6000 ரொக்கம் திருட்டு. திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த அன்பரசன் என்பவர் தனது குடும்பத்துடன் சாமி கும்பிட நேற்று இரவு கோவிலுக்கு வந்து கோவில் வளாகத்தில் தங்கியிருந்து இன்று காலை கோவில் வளாகத்தில் உள்ள முடி மண்டபத்தில் முடிகாணிக்கை செலுத்தி விட்டு குளிக்க சென்றுள்ளார்.

அப்போது தனது ஆடைகள் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 1. 1/2 பவுன் செயின் மற்றும் 6000 பணத்தை துணிகளோடு மறைத்து வைத்து குளித்துள்ளார். குளித்துவிட்டு திரும்ப வந்து பார்த்தபோது தனது ஆடைகளையும் நகை மற்றும் பணம் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பரசன் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி