லால்குடி அருகே +12 தேர்வில் மாணவன் சாதனை

52பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா. பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு எஸ் என் பிரதீப் என்ற மகனும், எஸ் என் பிரவீனா மகளும் உள்ளனர்.
இவர் தனது இரண்டு பிள்ளைகளையும் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூர் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கவைத்து தனியார் பள்ளியில் படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 1ம் ந்தேதி தொடங்கியது. இத்தேர்வினை நாராயணன் மகன் எஸ் என் பிரதீப் என்பவரும் எழுதினார்.
தேர்வு நடைபெற்ற சமயத்தில் நாராயணனுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். தேர்வின் போது தந்தை உயிர் இழந்ததை பார்த்து பதறிய மகன் கதறி அழுதார். கதறி அழும் மகனை தாய் சீதா உறவினர்கள் தேற்றினார்கள். தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீ போய் தேர்வை சரியாக எழுது என கூறி தேர்வுக்கு அனுப்பினார்கள். அழுது கொண்டு தேர்வுக்கு சென்ற எஸ் என் பிரதீப் தேர்வினை எழுதி முடித்தார். இத்தருணத்தில் மே 6ஆம் தேதி இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வில் எஸ்என் பிரதீப் தமிழில் 74, ஆங்கிலம் 76, இயற்பியல் 72, வேதியியல் 79, கம்யூட்டர் சயின்ஸ் 88, கணிதம் 64 என மொத்தம் 453 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியை இழந்த எனது தந்தைக்கு காணிக்கையாக்குகிறேன் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி