இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

78பார்த்தது
தா. பேட்டை அருகே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

தா. பேட்டை அடுத்த வாளவந்தி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவர் திருச்சி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் எழிலரசி (23) பி. இ படித்துள்ளார். இந்தநிலையில் எழிலரசிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இன்றும் ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதால் இருவீட்டாரும் திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு எழிலரசி வழக்கம்போல் தூங்குவதற்காக தனது அறைக்கு சென்றுள்ளார். நேற்று காலை அவரது அறை திறக்கப்படாததால் பெற்றோர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளனர். எழிலரசி தனது அறையில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தசம்பவம் குறித்து ஜெயபால் ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மார்நாடு தலைமையில் போலீசார் எழிலரசி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் எழிலரசி இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி