பட்டாசு வெடி விபத்து - அமைச்சர் நேரில் ஆறுதல்

71பார்த்தது
பட்டாசு வெடி விபத்து - அமைச்சர் நேரில் ஆறுதல்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்து நடந்த இடத்திற்குச் சென்ற வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், காயமடைந்து மருத்துவமனையில் இருப்பவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்புடைய செய்தி