குமாரபாளையத்திலிருந்து பள்ளிபாளையம் செல்லும் சாலையில், சானார்பாளையம் பகுதியில், பாலாஜி பேக்கரி அருகே வந்த போது, இங்குள்ள வேகத்தடையின் மீது வேகமாக ஏறி இறங்கி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் லோகராஜனுக்கு, பலத்த அடி ஏற்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பூவரசன் ஈரோடு செந்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். லோகராஜன் மூளைச்சாவு அடைந்துள்ளதாக நேற்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் இவரது தாயார் பாப்பாத்தி, 52, தன் மகனின் உடலை தானம் செய்ய முன்வந்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு லோகராஜன் தந்தை இறந்து விட்டார். இதனால் இந்திய நோயாளிகளுக்கு லோகராஜின் இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், இதய வால்வுகள், நுரையீரல், இரண்டு கண்கள் ஆகியவற்றினை முழு மன சம்மதத்துடன் வழங்க, இவரது தாய் மற்றும் உறவினர்கள் ஏகமனதாக முடிவு செய்து உடல்தானம் வழங்கியுள்ளனர். இவர்களை பெருமளவில் பாராட்டி வருகின்றனர்.