உணவு பொருட்களில் அதிக அளவு கலப்படம் இருப்பது தொடர்பாக அதிகாரிகள் தீவிர ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பல இடங்களில் தாகம் தீர்க்க மக்கள் விரும்பி வாங்கி சாப்பிடும் தர்பூசணியில் சிவப்பு நிறத்தை அதிகரிக்க ரசாயனம் கலந்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. . இந்நிலையில் பழங்கள் மற்றும் உணவு பொருட்களில் ரசாயணம் கலந்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.