புதுச்சேரியின் 2025-26ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்துவருகிறார். அவரது பட்ஜெட் உரையில், ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசியுடன், 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அரசு மற்றும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும். இனி வாரம் முழுவதும் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படும். விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.2,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.