டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படுகிறது.