இறப்புகள் அதிகம் ஏன்? - அமைச்சர் மா.சு புது விளக்கம்

57பார்த்தது
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வருகை தந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஷ சாராய அருந்தியவர்கள் மருத்துவமனைக்கு செல்ல தயங்கியதே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் எனவும், விஷ சாராய அருந்திய 9 பெண்கள் உட்பட 168 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் 3 பெண்கள் உட்பட 48 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.