கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் உடல் கவலைக்கிடமாக உள்ளது. ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விஷச்சாராயம் குடித்துவிட்டு தான் உயிரிழப்பதற்கு முன்பாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் தனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்று கூறி வாந்தி எடுக்க முயற்சிக்கிறார். மேலும் அவரின் மனைவி தன்னுடைய கணவர் ஒரு பாக்கெட் சாராயம் வாங்கி குடித்ததாக கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.