ஒரு பதிவால் விஜய்யை கலாய்க்கும் நெட்டிசன்கள்

84பார்த்தது
ஒரு பதிவால் விஜய்யை கலாய்க்கும் நெட்டிசன்கள்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 51 பேர் உயிரிழந்த நிலையில் நடிகரும் த.வெ.தலைவருமான விஜய் நேற்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் நாளை தனித்து பிறந்தநாளை கொண்டாட வேண்டாம், அதற்கு பதிலாக கள்ளக்குறிச்சி பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் என ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாளை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தின் 2வது பாடல் வெளியாகும் என விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதனை அரித்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்துதள்ளி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி