ஏலத்தில் வரும் பொருட்கள்! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

74பார்த்தது
ஏலத்தில் வரும் பொருட்கள்! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
உலகளவில் பிரபலமான கோயிலாக திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் திகழ்கிறது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக பணம் மட்டுமின்றி பல பொருட்களையும் செலுத்துகின்றனர். அந்த வகையில் காணிக்கையாக செலுத்தப்பட்ட மொபைல் போன்கள், கடிகாரங்கள், ஆகியவை ஜூன் 24ஆம் தேதி மின்னணு முறையில் ஏலத்தில் விடப்படவுள்ளது. இந்த அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.