சிவகாசி - Sivakasi

சிவகாசி: வீட்டில் தீ விபத்து...

சிவகாசி அருகே வீட்டிலிருந்த மின் சாதன இயந்திரத்தில் தீ விபத்து. விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகர எல்லைக்கு உட்பட்டPKS ஆறுமுகம் நாடார் தெருவில் ஜெகதீஸ்சந்திரபோஸ் என்பவர் வீட்டில் மின் சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ரசயானம் கலந்த பவுடரை கொண்டு தீயை அணைத்தனர். உடனடியாக தீயை அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து மற்றும் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்